Monday, August 30, 2021

கோகுலாஷ்டமி ஸ்பெஷல்..!!

கிருஷ்ண பரமாத்மாவின் ஜெனனம் ..!!


எப்போதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலை தூக்கும் போது நான் பூமியில் பிறந்து தர்மத்தை நிலை நாட்டுவேன் என்று கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் கூறியுள்ளார். 

கிருஷ்ண ஜெயந்தி ஆவணி மாதம் சுக்ல பட்ச அஷ்டமி திதியில், நள்ளிரவு 12 மணிக்கு அவதரித்தார்.

அவர் அவதரித்த அந்த தினத்தை கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி என கொண்டாடுகின்றோம். 

கிருஷ்ணர் ஏன் வசுதேவர் மற்றும் தேவகிக்கு மகனாக பிறந்தார் !! 

கடவுள் நமக்கு மகனாக பிறக்கவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என கூறுவதுண்டு.

அப்படியே பகவான் கிருஷ்ணர் வசுதேவர் மற்றும் தேவகிக்கு மூன்றாவது முறையாக மகனாக பிறந்தார் என்றால் அவர்கள் எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

ஆம் பகவான் கிருஷ்ணர் மூன்றாவது முறையாக வசுதேவர் - தேவகி தம்பதிக்கு மகனாக அவதரித்தார்.

ஒவ்வொரு பிறவியிலும் ஒவ்வொரு பெயரில் இருந்த இந்த தம்பதிக்கு பகவானே பிள்ளையாக பிறந்துள்ளார்.

கிருஷ்ணரின் பிறப்பு: 

கிருஷ்ணர் வசுதேவர் தேவகிக்கு எட்டாவது மகனாக பூமியில் அவதரித்தார்.

இந்த பூமியில் மனிதர்களின் பாவ மூட்டைகள் மலை கணக்கில் பெருகி போனதால் (தாவரங்கள், மிருகங்கள், தண்ணீர், காற்று மற்றும் அவர்களையே அழித்து வரும் மனிதர்களின் பாவங்கள் இதில் அடக்கம்), அதனை தாங்க முடியாத பூமா தேவி, நிலைமை மோசமாவதற்குள் விஷ்ணு பகவானின் உதவியை நாடினார்.

தேவாதி தேவர்களும் முனிவர்களும் ரிஷிகளும் பார்வதி பரமேஸ்வரன் நாரதர் என எல்லோரும் சேர்ந்து மஹாவிஷ்ணுவின் வைகுண்டம் சென்று முறையிட்டனர்.

அப்போது மஹாவிஷ்ணு பிறப்பு இறப்பு மற்றும் கர்மத்திற் கெல்லாம் அப்பாற்பட்ட வராய் நான் பூமியில் அவதாரம் செய்யும் நேரம் வந்துவிட்டது.

 அப்போது அன்று ரோகிணி நட்சத்திரம் சாதகமாக அமைந்தது.

 அஷ்டமி திதி வேண்டிக் கொண்டதற்கு இணங்கவும்

ஆதிசேஷன் பிரபு போன ஸ்ரீராம அவதாரத்தில் தங்களுடைய தமையனாக பிறக்கும் பாக்யம் பெற்றேன்.

இப்போது எடுக்கும் அவதாரத்தில் தங்களுடைய அண்ணனாக பிறக்கும் வாய்ப்பு கொடுங்கள் என்றார்.

சரி என்று மஹா விஷ்ணுவும் புன்னகைத்தார்.

இதுவே கிருஷ்ண பரமாத்மா அவதரிப்பதற்கு தூண்டுதலாக அமைந்தது.

கம்சன் என்ற வடிவில் தீய சக்தியாக வாழ்ந்து வந்தவன் மதுராவை ஆண்டு வந்த கொடுங்கோல் மன்னன். 

தீய சக்தியின் உச்சத்திற்கே சென்றது கம்சன் செய்த பாவங்கள்.

அப்போது கம்சனின் சகோதரியான தேவகியை வாசுதேவன் திருமணம் செய்யும் நாள் வந்தது.

திருமணம் இனிதே நடைபெற்றது.

தன் தங்கை மீது அளவற்ற அன்பு கொண்ட கம்சன் சந்தோஷமாக தானே தேரை ஓட்டினான். 

அப்போது, வானில் இருந்து அசரீரியாக 'வாசுதேவர் மற்றும் தேவகிக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையால் நீ கொல்லப்படுவாய் என்றது.

இதனை கேட்டு கோபத்தின் உச்சியை அடைந்த கம்சன் உடனடியாக தன் வாளை உருவி தங்கை என்று பாராமல் தேவகியை கொல்ல முற்பட்டான்.

இருப்பினும் தன் மனைவியின் உயிரை பறிக்க வேண்டாம் என வாசுதேவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அவளை உயிருடன் விட்டு வைத்தான்.

அதற்கு பிரதிபலனாக தங்களுக்கு பிறக்கும் அனைத்து குழந்தைகளையும் கம்சனிடம் ஒப்படைத்து விடுவதாக அவன் வாக்களித்தான். 

இது நல்ல யோசனை என்று தேவகியையும் வசுதேவரையும் சிறையில் அடைத்து சித்ரவதை செய்தான்.இப்படியே அவர்களுக்குப் பிறந்த ஒவ்வொரு குழந்தையையும் கொன்று தனக்கு பகைவர்கள் இருக்கக் கூடாது என நினைத்தான்.7வது குழந்தையாக பலராமன் தேவகியின் வயிற்றில் இருந்தார்.

அப்போது விஷ்ணு பகவான் விஷ்ணுமாயா தேவியை அழைத்து, தேவகி வயிற்றில் இருக்கும் பலராமன் கருவை, கோகுலத்தில் வசிக்கும் நந்தகோபரின் மனைவியர்களில் ஒருவரான ரோகிணியின் கருவுக்குள் மாற்றம் செய்ய சொன்னார். 

மேலும் விஷ்ணுமாயா தேவியை யசோதையின் மற்றொரு கருவாக வளர சொன்னார்.

பலராமன் ரோகிணியின் கருவுக்குள்ளும், விஷ்ணுமாயதேவி யசோதையிடமும் கருவாக வளர்ந்து வந்தனர்.

தேவகிக்கு கிருஷ்ணர் எட்டாவது குழந்தையாக கருவில் வளர்ந்து வந்தார்.

ஆவணி மாதம் சுக்ல பட்ச அஷ்டமி திதியில் எட்டாவது குழந்தையாகக் ஆயிரம் சூரியனின் பிரகாசத்தைபோல் கிருஷ்ணர் பிறந்தார்.

 தேவகியும், வசுதேவரும் குழந்தையை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர்.

 தேவர்கள் அனைவரும் பூமாரி பொழிந்தனர்.

அப்போது கிருஷ்ண பரமாத்மா மஹா விஷ்ணுவாக மாறி காட்சி அளித்தார்.

நீங்கள் சுதபா & பிருச்னி தம்பதியாக இருந்த போது 12 தேவ ஆண்டுகள் கடும் தவம் இருந்து என்னை நோக்கி தவமிருந்தீர்கள்.

அதன் பயனாக உங்களுக்கு காட்சி அளித்த நான் என்ன வரம் வேண்டும் என கேட்டேன்.

அதற்கு நீங்கள் பரமாத்மாவான நீங்கள் எங்களுக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் என கேட்டீர்கள்.

 அதன் படி நான் பிருச்னி கர்பா என்ற பெயரில் பிறந்தேன்.

 அதன் பின்னர் அடுத்த பிறவியில் காஷ்யபர் - அதிதி தம்பதியராக இருந்த போது உங்களுக்கு உபேந்திரன் என்ற பெயரில் பிறந்தேன்.

இப்போது நீங்கள் வசுதேவர் - தேவகியாக பிறப்பெடுத்துள்ள உங்களுக்குக் கிருஷ்ணராக நான் பிறந்துள்ளேன்.

தற்போது கம்சனிடமிருந்து விடுவிக்க வேண்டிய கடமை எனக்கு உள்ளதால், என்னை கோகுலத்தில் உள்ள, நந்தகோபரின் மனைவி யசோதையிடம் என்னை சேர்த்துவிடுங்கள். 

அதற்கு பதிலாக அவருக்கு பிறந்த பெண் குழந்தையை இங்கு கொண்டுவந்து தன் பிள்ளை என கூறுங்கள். 

அதன் பின்னர் நான் பார்த்துக் கொள்கின்றேன் என கூறிவிட்டு மீண்டும் குழந்தையாக மாறிவிட்டார்.

இப்படி மூன்று முறை அல்ல பலமுறை மஹா விஷ்ணு ஒரே தம்பதிக்கு மகனாக பிறந்துள்ளார் என்றால் அவர்கள் எவ்வளவு பாக்கியம் செய்திருப்பார்கள்.

வாசுதேவருக்கு பிறந்த எட்டாவது குழந்தையை பார்த்து கொண்டிருந்த போது பகவான் சொன்னது போல தானாக திறந்த கொண்டது சிறைச்சாலை கதவுகள்.

மேலும் கட்டிபோட்டு வைக்கப்பட்டிருந்த வாசுதேவனின் கயிறுகள் தானாக விடுவித்துக் கொண்டது.காவலர்கள் அனைவரும் மயக்கம் அடைந்தனர்.

பகவானின் ஆணைப்படி வாசு தேவரும் கிருஷ்ணரை தூக்கி கொண்டு வெளியே வந்தார்.

அப்போது வானில் இடியுடன் கூடிய பேய் மழை பெய்தது.

 குழந்தையாக இருந்த பகவானுக்கு ஆதிசேஷன் குடையாக துணை வந்தார்.


கிருஷ்ண பகவான் பாதம் தொட்ட யமுனை நதி தன் நெடுநாள் ஆசை தீர்ந்தது என்று தன் வேகத்தை குறைத்து வசுதேவருக்கு வழி விட்டது.

வாசுதேவர் தன் ஆண் குழந்தையை நந்தகோபரிடம் ஒப்படைத்த பின்பு,

krishna idol


Bal Gopal Krishna Click here

நந்தகோபருக்கு அன்று அங்கு பிறந்த பெண் குழந்தையுடன் மீண்டும் சிறைச்சாலைக்கு திரும்பினார் வாசுதேவர்.மீண்டும் சிறைச்சாலை மூடிக்கொண்டது.காவலர்கள் மயக்கம் தெளிந்தனர்

பெண் குழந்தை பிறந்துள்ளது ‌என்று கம்சனிடம் தெரிவித்தனர் காவலர்கள்.

நடந்த நிகழ்வுகள் பற்றி எதுவும் கம்சனுக்கு தெரியவில்லை.

அந்த பெண் குழந்தையை கொல்ல கம்சன் காலை பிடித்த போது,

திடீரென விஷ்ணு மாயாவாக மாறிய அக்குழந்தை

 அடேய் கம்சா !!

என் காலை பிடித்ததால் உன்னை உயிரோடு விட்டேன். உன்னை கொல்லப்போகும் குழந்தை ஏற்கனவே இந்த பூமியில் பிறந்து விட்டது.

உன்னை கொல்வதற்கான வயதை அது எட்டும் வரை அது யார் என்பதை உன்னால் கண்டு பிடிக்க முடியாது' என கம்சனிடம் கூறியது.

Raj Costume Kids Krishna Brocade Fabric Janmashtami Mythological Character Costume (RJC_Krishna, Yellow, 4-5 Years) Click here


பிறகு கம்சன் அனுப்பிய பல அசுரர்களையும் கிருஷ்ணர் மற்றும் பலராமர் துவம்சம் செய்தனர்

கிருஷ்ண பரமாத்மாவின் ஏழாவது வயதில் கம்ச வதம் நிகழ்ந்தது.


 கம்சன் சிறையில் அடைத்த தன் தாய் தந்தையரை விடுவித்தார்.

 ஊரே விழாக்கோலம் பூண்டது.

 பின்னர் பாண்டவர்களுக்கு கடைசி வரை உறுதுணையாக இருந்தார்.

 கிருஷ்ண பரமாத்மா செய்த லீலைகள் ஒன்றா இரண்டா..

 ஆஹா கணக்கே இல்லை.

மதுரா துவாரகா போன்ற இடங்களில் இன்றும் கூட பிரம்மாண்டமாக கிருஷ்ண ஜென்மாஷ்டமியை கொண்டாடுவார்கள்.

உங்கள் வீட்டில் கிருஷ்ண விக்ரஹம் இருந்தால் சாளக்கிராம பூஜையுடன் சேர்ந்து அபிஷேகம் செய்து தூபம் தீபம் காட்டி நவல் பழம் வெண்ணெய் முறுக்கு சீடை லட்டு ஜாங்க்ரீ பால் பாயாசம் நிவேதனம் செய்து சாஷ்டாங்கமாக ஒரு நமஸ்காரம் செய்து கிருஷ்ணாஷ்டகம்

விஷ்ணு சஹஸ்ரநாமம் விஷ்ணு சூக்தம் நாராயண சூக்தம் பாராயணம் செய்து ஸ்ரீமத் பாகவதம் படிக்கலாம் அன்று முழுவதும் உபவாசம் இருந்து கிருஷ்ணரை மட்டுமே நினைத்து ‌காலை குளித்து விட்டு மீண்டும் சாளக்கிராம பூஜையுடன் கிருஷ்ண பூஜை செய்தால் வைகுண்டம் அழைத்துச் செல்வார் பரமாத்மா.

 ஸ்ரீகிருஷ்ணர் காயத்ரி மந்திரம்

 ஓம் தாமோதராய‌ வித்மஹே

ருக்மிணி வல்லபாய தீமஹி

தந்நோ ஸ்ரீகிருஷ்ண ப்ரசோதயாத். 

|| 108 முறை ||

கோகுலாஷ்டமி அன்று விரதமிருந்து வழிபட்டால் சகல செளபாக்யமும் அஷ்ட லஷ்மியின் பரிபூரண அருளும் ஸ்ரீ பார்வதி பரமேஸ்வரனின் அருளும் சேர்ந்து கிடைக்கும்.

இந்த கதை படிப்பவர்கள் பாவம் அகலும் ஸ்ரீகிருஷ்ணரின் அருளால் சகல செளபாக்யமும் இல்லத்தில் நீடிக்கும்.

முக்கியமாக குழந்தை வேண்டி தவம் இருப்பவர்கள் கோகுலாஷ்டமி அன்று விரதமிருந்து வழிபடுங்கள்.

கோகுலாஷ்டமி அன்று யார் உங்கள் வீட்டிற்கு வந்தாலும் கிருஷ்ணராக பாவித்து ராஜ உபசாரம் செய்யுங்கள் மற்றபடி உங்களை அவர் பார்த்து கொள்வார்.

ஜெய் ஸ்ரீராம்

சர்வம் கிருஷ்ணார்பணமஸ்து.

படித்தை பகிர்கிறேன்

Our You tube channel    https://www.youtube.com/c/A2ZAMUTHAM

Our Facebook https://www.facebook.com/A2ZAMUTHAM


Reference: Books and other web source

If you have any suggestion kindly write comment section.

By Nathan B.com  PG Dip in Yoga and Holistic Heath...

Tuesday, August 10, 2021

கொண்டைக்கடலையின் மருத்துவ நன்மைகள் | Medicinal benefits of chickpeas


சுண்டல் என்றாலே, பொதுவாகக் கறுப்புக் கொண்டைக்கடலை சுண்டல்தான். உறுதியாகவும் இனிப்பு சுவை இல்லாமலும் இருப்பதால் உப்பு சேர்த்தோ, வேக வைத்தோ, வறுக்கப்பட்டோ சாப்பிடப்படுகிறது. பொரிகடலை கடைகளில் விற்கப்படும் உப்புக்கடலை, மிகவும் பிரபலமான ஒரு நொறுவை. உடைச்ச கடலை எனப்படும் பொட்டுக்கடலையும் அதற்கு இணையாகப் பிரபலமானதுதான்.

புட்டு, ஆப்பத்துக்குச் சிறப்பு சுவை சேர்க்கும் கேரளக் கடலைக்கறி, கறுப்புக் கொண்டைக்கடலை குழம்புதான். இது முளை கட்டப்பட்டுச் சாலட்களில் சேர்க்கப்படுகிறது. கெட்டி குழம்பு, சூப்புகளில் இடம்பிடிக்கிறது. தெற்காசியாவில் பல்வேறு சுவையான உணவு வகைகளில், கறுப்புக் கொண்டைக்கடலை பயன்படுத்தப்படுகிறது. இதை வறுத்துப் பொடி செய்து, நீர் சேர்த்துக் கொதிக்க வைத்துக் காப்பியைப் போலப் பயன்படுத்தலாம்.

கர்ப்பிணிகளுக்கு அவசியத் தேவையான ஃபோலிக் அமிலம், ஆன்டிஆக்சிடண்ட் தன்மை கொண்ட சாப்போனின் போன்ற ஃபைட்டோ வேதிப்பொருட்கள் அதிகமுள்ளன.

வெள்ளைக் கொண்டைக்கடலையைவிட இதில் நார்ச்சத்து அதிகம், சர்க்கரையை வெளியிடும் பண்பு குறைவு.

குளுகோஸ் பயன்பாட்டை மேம்படுத்தக்கூடியது என்பதால் நீரிழிவு நோயாளிகள் இதைத் தொடர்ச்சியாகச் சாப்பிடலாம்.

இதன் சாறு இரும்புச்சத்து நிரம்பியது. இரும்புச் சத்து குறைபாடு, ரத்தசோகையைத் தடுக்க உதவுகிறது.

வேக வைத்த கறுப்புக் கொண்டைக்கடலை ஒரு கப் 269 கலோரி சக்தியைத் தரும். அதேநேரம் இதில் இருக்கும் 15 கிராம் புரதம், ஒரு நாளைக்குத் தேவையான 2000 கலோரி உணவில் 30 சதவீதத்தை ஆரோக்கியமான வகையில் தரக்கூடியது.

முதிராத கொண்டைக்கடலையில் சிறிது நீர் விட்டு அருந்த, சீதக்கழிச்சல் உடனடியாகக் கட்டுப்படும்.

சிறுநீர்ப்பெருக்கி செய்கை இருப்பதால், சிறுநீர் அடைப்பை சரி செய்யும் தன்மை, கறுப்புக் கொண்டைக்கடலை சுடுநீருக்கு உண்டு.

இளம் கொண்டைக்கடலை விதைகளுக்குக் காமம் பெருக்கும் செய்கை உண்டு.

கொண்டைக்கடலைச் செடியின் மீது ஒரு வெள்ளைத் துணியை இட்டு, அதன் மீது படியும் பனி நீரைப் பிழிந்து சேகரிப்பது கடலைப் புளிப்பு என்று அழைக்கப்படுகிறது செரியாமை, வாந்தி போன்ற நோய்களுக்கு இந்தப் புளிப்பு நீர் மருந்தாகப் பயன்படுகிறது

கொண்டைக் கடலை எனப்படும் மூக்கடலையில் புரதம், இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து மற்றும் பல வைட்டமின்களும், ஊட்டச்சத்துகளும் உள்ளன.

மூக்கடலை சுண்டல் சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலமடையும், உடல் உறுதியாகும்.

கடலையை அரைத்துப் பாலில் கலந்து குடித்தால் சீதக் கழிச்சல் குணமாகும்.

பச்சைக் கொண்டைக் கடலையை ஊறவைத்து சாப்பிட்டால் சளி, இருமல் குணமாகும். நுரையீரல் தொடர்பான நோய்களும் குணமாகும் 

மேலும் இந்த சுண்டலை தினமும் 2-3 டேபிள் ஸ்பூன் சாப்பிட்டு வந்தால், பழங்கள் மற்றும் காய்கறிகள் மூலம் கிடைக்கும் சத்துக்களைப் பெறலாம். இங்கு ப்ரௌன் நிற சுண்டலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சுண்டலில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவை உடல் எடை குறைய உதவி புரியும். அதிலும் இதனை தினமும் 1/2 கப் வேக வைத்து சாப்பிட்டு வந்தால், வயிறு நிறைவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமல், அதனால் கண்ட உணவுப் பொருட்களை உட்கொள்ளாமல், உணவில் கட்டுப்பாட்டுடன் இருக்கலாம்.

கொலஸ்ட்ரால் குறையும்

சுண்டலில் கரையும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், அவை கொலஸ்ட்ரால் அளவைக் குறையும். அதற்கு தினமும் 3/4 கப் ப்ரௌன் நிற சுண்டலை வேக வைத்து சாப்பிட்டு வாருங்கள்.

சிறுநீர் பிரச்சினைகள் தீர

கொண்டைக்கடலையை வறுத்து பொடி செய்து தினமும் இருவேளை உட்கொண்டு வர வயிறு பொருமல், சிறுநீர் சரிவர வெளிப்படாமல் சொட்டு சொட்டாக போதல், சிறுநீர் எரிச்சல் போன்றவை குணமாகும்.

தலைவலி, தலைபாரம் குணமாக

கொண்டைக்கடலையை லேசாக வறுத்து சாப்பிட்டு பின் பால் அருந்தி வர இருமல், தலைவலி, தலைபாரம் ஆகியவை குணமாகும்.

உடல் உறுதி பெற

கொண்டைக்கடலையில் இரும்புச்சத்து, புரதம், சுண்ணாம்பு சத்து மற்றும் பல வைட்டமின்களும் ஊட்டச்சத்துக்களும் உள்ளதால் இதனை இரவில் ஊறவைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் எலும்பு, நரம்புகள் பலமடையும், அத்துடன் உடலை உறுதியாக்கும். பச்சையாக இல்லாமல் அவித்து சுண்டல் செய்தும் சாப்பிடலாம்.கொண்டைக்கடலையை அவித்து அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர உடலுக்கு உறுதியை கொடுக்கும்

பின்குறிப்பு

வாத நோய் உள்ளவர்கள், மூல நோய் உள்ளவர்கள், மலச்சிக்கல் உள்ளவர்கள் கொண்டைக் கடலையை தவிர்ப்பது நல்லது. இதனை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது உடலுக்கு கெடுதலை உண்டாக்கும். எனவே இதனை அளவோடு பயன்படுத்துவது நல்லது.

படித்தை பகிர்கிறேன்

Our You tube channel    https://www.youtube.com/c/A2ZAMUTHAM

Our Facebook https://www.facebook.com/A2ZAMUTHAM


Reference: Books and other web source

If you have any suggestion kindly write comment section.

By Nathan B.com  PG Dip in Yoga and Holistic Heath...

மஞ்சளின் நன்மைகள்

இன்று நேற்று அல்ல பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் இந்தியர்களின் அன்றாட வாழ்வின் பெரும் பகுதியில் ஆன்மீகம் தொடங்கி உணவு , ம...