Tuesday, May 18, 2021

நார்த்தங்காயின் நன்மைகள் | Citron Benefit

உடல்சூடு தணிக்கும் நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் பெரிதாக அளவில் காணப்படும். காய்கள் நன்கு பச்சையாக இருக்கும். நார்த்தம் பழத்தின் மணத்திற்கு மற்ற மணங்களைக் கட்டுப்படுத்தும் குணமுண்டு. நார்த்தம் பழத்திநன் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது. இந்தப் பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும். நன்கு பழத்த பழம் மஞ்சள், பச்சை கலந்து காணப்படும். பழத்தின் தோல்பகுதி கனமானதாக இருக்கும். இவற்றில் நீர் நிரம்பியிருக்கும். புளிப்பு சுவை மிகுதியாக இருப்பதால் இந்தப் பழத்தை சிலர் விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால் நன்கு கனிந்த பழம் நல்ல சுவையுடன் இருக்கும் கிராம மக்களின் சாத்துகுடியாக நார்த்தம்பழமே விளங்குகிறது

கனிந்த கனிகள்  இதன் சாறு வாந்தி நிறுத்தும். பசி தூண்டுவி, தசை இறுக்கி குளிர்ச்சி தரும். காய்ச்சலின் வெப்பம் மற்றும் தாகம் போக்கும். நாரத்தை பழத்தின் மேல் தோலை தேன் ல்லது ர்க்கரைப் பாகில் ஊற வைத்து ன்கு றியபின்சீதக் ழிச்சல் உடையவர்களுக்கு கொடுக்க ல்ல பலன் தரும்.

உடல் சூடு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். உடல் சூடு தணிய தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும். இப்பழச்சாறு மதிய வேளையில் அருந்திவந்தால் வெயிலின் தாக்கம் குறையும்.



பித்த அதிகரிப்பால் ஈரல் பாதிக்கப்படுவதுடன் இரத்தமும் அசுத்தமடைந்து பல நோய்கள் ஏற்படுகின்றன இந்த பித்த அதிகரிப்பால் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் உண்டாகிறதுஇதற்கு நார்த்தம் பழத்தை காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.

நார்த்தம் பழத்தை சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும் இரத்தம் மாசடையும்போது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடையும்நோயின் தாக்கத்தினால் அவஸ்தைப்பட்டு விடு பட்டவர்களின் உடல்நிலை தேற நார்த்தம்பழச் சாறு அருந்துவது மிகவும் நல்லது.



கர்ப்பிணிகள் காலையும், மாலையும் நார்த்தம் பழச் சாறு எடுத்து தண்ணீர் கலந்து அதில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு நன்றாகக் கலந்து அருந்திவந்தால் சுகப்பிரசவம் எளிதில் நடைபெறும்

சிலர் கொஞ்சம் சாப்பிட்டால் கூட வயிறு பெரிதாக பலூன் போல் காணப்படும் சில சமயங்களில் வாயுத் தொல்லையும் அதிகரிக்கும் இவர்கள் நார்த்தம் பழத்தை சாறு பிழிந்து வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் வாயுத்தொல்லையிலிருந்து விடுபட்டு வயிற்றுப் பொருமல் நீங்கும். எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு நீண்ட ஆயுளோடு வாழலாம்

நாரத்தங்காய் இலைகைளை நரம்புநீக்கி ல்லெண்ணெய்விட்டு வதக்கி அதனுடன் வெள்ளை உளுந்தம் பருப்பு கடலைப் பருப்பு, தேங்காய் துருவல் வறுத்து சேர்த்துமிளகாய் ப்பு, புளி பெருங்காயம் றிவேப்பிலையும் சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன்பிசைந்து சாப்பிடலாம் ப்படி சாப்பிட்டு வரபித்தம் குறையும். ர்ப்ப காலத்தில் ற்படும் நா சுவையின்மை, குமட்டல், வாந்திநிற்கும். யி‌‌ன்மை குறைந்து ன்கு சிக்கும். பொதுவாக உணவுடன் நார்த்தங்காய் ஊறுகாய் சேர்த்துக் கொண்டால் செரியாமைபிர‌‌ச்சினை வரவே வராது. சாப்பிட்டதும் ப்பம் ந்து கொண்டிருந்தாலும், ‌‌ஜீரணமாக நெடுநேரம் ஆனாலும் நார்த்தங்காய் ஊறுகாயை சாப்பிட்டால் உடனடி பலன்கிட்டும். யிற்றில் வாயுப்பிரச்சினை ற்படும்நிலையில் ஒரு ஊறுகாய் துண்டை எடுத்து வாயில் போட்டு மென்றுதி‌‌ன்றால் வாயுக் கோளாறுவிரைவில்நீங்கும்.


யிற்றில் ற்பட்ட புண்ணிற்கு நார்த்தங்காய் ஊறுகாய் ல்ல மருந்தாக அமைகிறது. நாத்தங்காயை ட்ட ட்டமாய் நறுக்கி ப்பு சேர்த்து ஒரு ண் பானையில் ட்டு வாயை துணியால் மூடிவிடவும். இதனை வ்வப்போது வெ‌‌யிலில் உலர்த்தி வரவும். ப்படி 40 நாட்கள் செய்துபிறகு தில் இருந்துதினமும் ஒரு துண்டை எடுத்து காலையிலும் மாலையிலும் சாப்பிட்டு வர யிற்றுப் புண் குணமாகும். நாரத்தங்காயை ல்லது பழத்தை ந்த வடிவத்திலாவது உணவில் சேர்த்து வர த்தம் சுத்தமடையும் வாதம், குன்மம் (யிற்றுப் புண்), யிற்றுப் புழு இவைநீங்கும். சியை திகரிக்கும். நாரத்தை பழத்தின் மேல் தோலை தேன் ல்லது ர்க்கரைப் பாகில் ஊற வைத்து ன்கு றியபின்சீதக் ழிச்சல் உடையவர்களுக்கு கொடுக்க ல்ல பலன் தரும். நாரத்தை பழத்தை சாறுபிழிந்து குடித்து வர உடல் வெப்பத்தை போக்கி குளிர்ச்சி தரும். வாந்தியையும், தாகத்தையும் ணிக்கும் 

படித்தை பகிர்கிறேன்

Our You tube channel    https://www.youtube.com/c/A2ZAMUTHAM

Our Facebook https://www.facebook.com/A2ZAMUTHAM


Reference: Books and other web source

If you have any suggestion kindly write comment section.

By Nathan B.com  PG Dip in Yoga and Holistic Heath...

 

Wednesday, May 5, 2021

கருமருது | ஒரு அழகு மற்றும் நிழல் தரும் மரம்| Indian laurel

 


Tenminalia spp.

ஓங்கி உயர்ந்து வளர்ந்து நிழல் தரும்

மருத மர இனத்தைச் சார்ந்த இம்மரங்களில் இரண்டு நெருங்கிய சிற்றினங்கள் இந்தியாவில் காணப்படுகின்றன.

1.Terminalia elliptica

2.Terminalia tomentosa

இவை இரண்டையுமே தமிழில்  கருமருது என்றே அழைக்கப்படுகிறது.

Terminalia arjuna என்பதை தமிழில் மருது,வெண்மருது மற்றும் நீர் மருது என அழைக்கப்படுகிறது.

கரு மருது  தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா, இந்தியா,நேப்பாளம், வங்காளதேசத்தில் அதிகம்  காணப்படுகிறது.  உயரமாக வளரக்கூடிய இதன் இலைகளைப் பட்டுப்பூச்சி உணவாக உண்கிறது.இம்மரங்கள் ஆற்றோரங்களிலும்  வயலோரங்களிலும்  செழித்து வளரும்.

வைகை ஆற்றங்கரையில் மருத மரங்கள் மிகுதியாக இருந்த காரணத்தால் அவ்வூர் மருததுறை என அழைக்கப்பட்டு பின்னர் மருதை எனவும் மதுரை என்றும் மருவிற்று என கூறப்படுகிறது.

ஐந்திணை நிலங்களில் மருதமரம் நிறைந்த வயல் வெளிகள் மருத நிலமாக தமிழில் வகைப்படுத்தப்படுகிறது.இதிலிருந்து நமது முன்னோர்கள் மருத மரங்களுக்களுக்களித்தமுக்கியத்துவத்தை அறிய முடிகிறது.

கருமருதின் இரண்டு வகைகளுமே தென்னிந்தியாவின் இலையுதிர் காடுகளில் 1000 மீட்டர் உயரம் வரை காணப்படுகின்றன. 

இம்மரங்கள் 30 மீட்டர் உயரமும், அடிமரம் 1 மீட்டர் குறுக்களவும் கொண்டவை.

வெண் மருதுவிற்கும் கருமருதுவிற்கும் உள்ள எளிதான வித்தியாசம் யாதெனில்,கருமருது பட்டையானது வெண் மருதைப்போல் மிருதுவாகவும்,வெண்மையாகவும் இருப்பதில்லை. இதன் பட்டைகள் வெடிப்புற்று பழுப்பு நிறத்தில் முதலைத்தோல் போல் காட்சியளிக்கும்.இதன் பட்டைகள் நெருப்பினை தாங்கும் சக்தி படைத்தவை.இதன் பட்டைகள் மருத்துவத்தில் வயிற்றுப்போக்கினை கட்டுப்படுத்த பயன்படுகிறது.இப்பட்டைகளிலிருந்து ஆக்ஸாலிக் அமிலம் பிரித்தெடுக்கப்படுகிறது.மேலும் பட்டைகள் தோல் பதனிடும் தொழிலில் பயன்படுத்தப்படுகின்றன.


இம்மரங்களின் இரண்டு இனங்களுமே உறுதியான வைரப்பகுதியை கொண்டிருப்பதால்,மரச்சாமான்கள் செய்யவும்,படகு கட்டவும், கிட்டார் போன்ற இசைக்கருவிகள் செய்யவும் பயன்படுகின்றன.

Terminalia tomentosa இன கருமருத மரங்கள் தங்கள் அடிமரப்பகுதிகளில் நீரை தேக்கி வைக்கும் குணம் கொண்டவை.கோடை காலங்களில் தங்கள் தாகத்தை தணித்துக் கொள்ள காடுகளில் பயணிப்பவர்கள் இம்மரத்தில் சிறு காயங்களை ஏற்படுத்தி பீறிட்டு வரும் நீரை குடிநீராக பயன்படுத்துவர்.இக்குடிநீர் வயிறு சம்பந்தமான நோய்களை தீர்க்கவல்லது.



இதன் மலர்கள் நீண்ட காம்புகளில் மங்கலான வெண் நிறத்தில் இருக்கும்.இம்மரங்கள் சுற்றுச் சூழல் காக்கவும்,நிழலுக்காகவும், இதன் தோற்றத்திற்காகவும் பூங்காக்கள்,சாலை ஓரங்கள் மற்றும்  ஆற்றங்கரைகளில் வளர்க்கப்படுகின்றன. 

சமூக காடுகளிலும் இம்மரங்களை மற்ற மரங்களுடன் சேர்த்து வளர்க்கலாம்.

                           அரவிந்தன்

இது போன்று மேலும் பல பயனுள்ள குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்

படித்தை பகிர்கிறேன்

Our You tube channel    https://www.youtube.com/c/A2ZAMUTHAM

Our Facebook https://www.facebook.com/A2ZAMUTHAM


Reference: Books and other web source

If you have any suggestion kindly write comment section.

By Nathan B.com  PG Dip in Yoga and Holistic Heath...

மஞ்சளின் நன்மைகள்

இன்று நேற்று அல்ல பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் இந்தியர்களின் அன்றாட வாழ்வின் பெரும் பகுதியில் ஆன்மீகம் தொடங்கி உணவு , ம...