Friday, February 26, 2021

 

அண்ணாச்சி பூவின் நன்மைகள்  STAR ANISE BENEFIT



அண்ணாச்சி பூ என்று அழைக்கப்படும் இந்த நட்சத்திர சோம்பு கறிகள்மற்றும் பிரியாணி வகைகளில் பார்த்திருப்போம்இந்தியாவில் பயன்படுத்தக்கூடிய மசாலாப் பொருட்களில் இந்த அண்ணாச்சி பூவும் முக்கியமான ஒன்றுஇதற்கு ‘அன்னாசி மொக்கு’, தக்கோலம்நட்சத்திர சோம்பு என்னும் வேறு சில பெயர்களும் உண்டுஇது வெறும் மணத்துக்காக மட்டுமல்லாமல் உணவை அழகுபடுத்துவதற்க்கும்மற்றும் மருந்தாகவும் பயன்படுகின்றது.



அண்ணாச்சி பூ பூர்வீகம்

அண்ணாச்சி பூ சீனாவை பூர்வீகமாக கொண்டதுசீன ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த அண்ணாச்சி பூவை பயன்படுத்தி வந்தார்கள்இது படிப்படியாக எல்லா நாடுகளுக்கும் பரவி சென்று இந்தியாவில் தற்போது இது ஒரு தவிர்க்க முடியாத மசாலா பொருளாக மாறி உள்ளது.



நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

அண்ணாச்சி பூவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறதுஇதில் பாக்டீரியா வைரஸ்பூஞ்சை மற்றும் ஈஸ்ட் இனங்களைக் கொல்லும் பய ஆக்டிவ் பொருட்கள் உள்ளதுஇந்த எதிர்ப்பு பண்பினால் நம் உடலில் எந்த ஒரு தொற்றுக்களும் ஏற்படாமல் நம்மை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள அண்ணாச்சி பூ உதவுகிறதுநம் உடலில் இருக்கும் நச்சுக்களை முழுமையாக அகற்றி நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்கிறது இந்த அன்னாச்சி பூ.



புளித்த ஏப்பம் தீரும்

ஒரு சிலருக்கு புளித்த ஏப்பம் உருவாகும்இது அவர்களுக்கு அசௌகரியத்தை உருவாக்கும்அப்படிப்பட்டவர்களுக்கு அன்னாசி பூ சிறந்த தீர்வாக இருக்கும்அன்னாசிப் பூவை பொடி செய்து அரை கிராம் அளவு எடுத்து  தினந்தோறும் மூன்று வேளையும் உணவுக்குப் பின் நீருடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் புளித்த ஏப்பம் உண்டாகாது.



சளி இருமல் பிரச்சனை தீரும்

அன்னாசி பூவை வறுத்து பொடி செய்து அரை ஸ்பூன் அளவு எடுத்து அதனுடன் சீரகம்மிளகு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி தேன் சேர்த்து காலைமாலை குடித்து வந்தால் சளிகாய்ச்சல்இருமல் போன்றவை குணமாகும்.

 

தசை வலி குணமாகும்

அன்னாசி பூவை வறுத்து பொடி செய்து எடுத்து அதனுடன் விளக்கெண்ணெய்நல்லெண்ணெய் ஆகியவற்றை தலா 100 மில்லி அளவு எடுத்து அனைத்தையும் சேர்த்து தைலமாக காய்ச்சவும்இந்த தைலத்தை தசையில் ஏற்படும் வலிகளுக்கு பயன்படுத்தினால் தசை வலி குணமாகிறதுதசை பிடிப்பை சரிசெய்கிறதுநெற்றியில் தடவும்போது மன இறுக்கத்தை போக்குகிறது.

 


அன்னாசி பூ எண்ணெய்

அன்னாசி பூவில் தயாரிக்கப்படும் எண்ணெய் சரும அலர்ஜியை சரி செய்கிறதுநரம்புகளை வலுவாக்கவும் ரத்த ஓட்டத்தை சீராக்கவும் இந்த எண்ணெய் உதவுகிறது.

இப்போதைய காலகட்டத்தில் ஏராளமான தொற்றுகள் மனிதர்களை தாக்கி வருகிறதுஇது அனைத்தையும் செயலிழக்க செய்வதற்கு நாம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும்எனவே உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்க இது போன்ற பொருட்களை உங்கள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும் ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

உடலில் உள்ள எல்லா உடல் நல குறைபாடுகளையும் சரிசெய்ய

 இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்

நன்றி பெருசங்கர்

 ஈரோடு  மாவட்டம் பவானி செல் நம்பர் 6383487768

 

Our You tube channel    https://www.youtube.com/c/A2ZAMUTHAM

Our Facebook https://www.facebook.com/A2ZAMUTAHM


Reference: Books and other web source

If you have any suggestion kindly write comment section.

By Nathan Manickam  PG Dip in Yoga and Holistic Heath.....



Thursday, February 25, 2021

 


ஆடுதீண்டாப்பாளை பயன்கள் ( Bracteated birth wort)

 


Tamil – Adu thinna palai

English – Bracteated birth wort

Sanskri – Dhuma patra

Malayalam – Aadu tinlappala

Telugu – Gadug gudupa

Botanical Name – Aristolochia bracteata

 

 

ஆடுதின்னாபாலை மூலிகையானது அரிஸ்டோலோகியா பிராக்டியோலேட்டா என்ற தாவரவியல் பெயரில் அரிஸ்டோலோகியேசி என்ற குடும்பத்தில் காணப்படுகிறது. இது தமிழில் ஆடுதின்னாப் பாலை என்றும் மற்றும் வணிக ரீதியாக கிடாமர் என்றும், ஆங்கிலத்தில் வர்ம் கில்லர் என்றும் வழங்கப்படுகிறது. இதன் தாயகம் மேற்கு ஆப்பிரிக்காவாகும். அரிஸ்டோலோகியாவில் மொத்தம் 400 இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.இம்மூலிகையானது ஆப்பிரிக்கா, அரேபியா, பாகிஸ்தன் மற்றும் இலங்கையிலும் இந்தியாவில் மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் காணப்படுகிறது. இது பொதுவாக உலர்ந்த கரிசல் மண் பூமியில் காணப்படும் களையாகும். தமிழகத்தின் கரிசல் மண் பிரதேசங்களில் குறிப்பாக மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் காணப்படுகிறது.
இத்தாவரமானது 0.5மீ வரை வளரக்கூடிய கொடி வகையைச் சார்ந்தது. பூக்கள் குழல் வடிவில் பழுப்பு நிறத்தோடும் இலைகள் இதய வடிவிலும் காணப்படும். ஜுலை - நவம்பர் மாதங்கள் இதற்கு ஏற்ற கால சூழ்நிலையாகும்.

 


“ஆடுதொடாப் பாளைக் ககக்கிருமி வன்சிலந்தி

நீடுகருங் குட்டம் நிறைகரப்பான்ஆடிடச் செய்

எண்பது வாய்வும் இகல்குட்ட முந்தீரும்

திண்பெருநற் றாதுவுமாஞ் செப்பு”

                                                                       (அகத்தியர் குணபாடம்)

 

ஆடு தீண்டாப்பாளை முழுத்தாவரமும் குமட்டலான மணமும் வெப்பத் தன்மையும் கொண்டது. ஆடு தீண்டாப்பாளை குடல் புண்களை ஆற்றவும் வயிற்றுப் புழுக்களைக் கொல்லவும் விஷத் தன்மையை முறிக்கவும் உடலைப் பலப்படுத்தவும் மாதவிலக்கைத் தூண்டவும் பயன்படுகின்றது.

ஆடு தீண்டாப்பாளை தரையோடு படர்ந்து வளரும் புதர்ச்செடி, மாற்றடுக்கில் அமைந்த, சாம்பல் படர்ந்த, முட்டை வடிவ இலைகள் கொண்டது. மலர்கள் ஆழ்ந்த சிகப்பு நிறமானவை. கனிகள் முதிர்ந்த நிலையில் உள்ளிருக்கும் விதைகள் வெடித்துச் சிதறும்.

ஆடு தீண்டாப்பாளை இந்தியா முழுவதும், முக்கியமாகச் சமவெளிகளில் வளர்கின்றது கருப்பு மண் உள்ள நிலங்கள், சற்றே உப்புச்சுவை கொண்ட கழி நிலங்களில் மிகவும் பரவலாக வளர்கின்றது பங்கம்பாளைவாத்துப்பூ ஆகிய பெயர்களும் ஆடு தீண்டாப்பாளை தாவரத்திற்கு உண்டு. முழுத்தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது.

வயிற்றுப் புழுக்கள் குணமாக ஆடு தீண்டாப்பாளை இலைச்சூரணம் ¼ தேக்கரண்டி அளவு வெந்நீருடன் கலந்து இரவில் குடிக்க வேண்டும் அல்லது ஆடு தீண்டாப்பாளை விதைச் சூரணம் ஒரு தேக்கரண்டி அளவு விளக்கெண்ணெயில் கலந்து இரவில் சாப்பிட வேண்டும். பேதியாகும் வாய்ப்பும் உண்டு. அவ்வாறு ஏற்பட்டால் மோர் சாதம் சாப்பிட்டு பேதியைக் கட்டுப்படுத்தலாம்.

பசுமையான ஆடுதீண்டாப்பாளை இலைகளை நசுக்கிப் பிழிந்து எடுத்த சாறு 50 மி.லி.யுடன் தேங்காயெண்ணெய் 50 மி.லி. சேர்த்து, நீர்வற்றும் வரை சுண்டக் காய்ச்சி, கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்திக் கொண்டு, மேல்பூச்சாகத் தடவிவர தோல் நோய்கள்,  சிரங்கு, கரப்பான், வண்டுக்கடி தீரும்

ஆடுதீண்டாப் பாளை இலைகள் கொஞ்சம் எடுத்து 1/4 லிட்டர் சுடு தண்ணீரில் 2மணி நேரம் ஊறப் போட்டு 2மணி நேரம் கழித்து வடி கட்டி 50 மில்லி அளவு தினந்தோறும் காலையில் மட்டும் குடித்து வந்தால் பூச்சிக் கடிகருமை நிறப்டைபன்றி தோல் போன்ற படை கிரந்திவிஷம்கனைச் சூடுகுடலில் தொல்லைப் படுத்தும் புழுக்கல்தலைமுடி உதிர்தல்சிலந்தி கடிவாதநோந்கள் குணமாகும்.



இதன் சமூலத்துடன் கருங்குருவை நெல்லும் சேர்த்து அவித்துஅவல் இடித்து தினமும் ஒரு வேலை 1 மண்டலம் சாப்பிட்டு வந்தால் சொறிசிரங்குகுஷ்டம்வண்டு கடிபூரான்கடிசெய்யான் கடி அரணைக் கடி முதலிய விஷங்கள் குணமாகும். அது வரையில் நல்லெண்ணெய் சேர்க்கக் கூடாது. அப்போது மிளகை பால் விட்டு அரைத்து தேய்த்து குளித்து வர வேண்டும். வாரம் ஒரு முறை விதையை சூரணம் செய்து 5 கிராம் அளவு விளக்கெண்ணெயில் கொடுக்க நன்றாக பேதியாகும் இதனால் வயிற்றுவலி தீரும். சூதகக் தடையை நீக்கி மாத விலக்கைத் தூண்டும்.

வேர் சூரணம் 1 கிராம் வெந்நீரில் கொடுக்க மகப்பேறு வேதனையை தீர்த்து சுகப் பிரசவத்தை உண்டாக்கும்.

இலையை காய வைத்து இடித்து சூரணமாக செய்து ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வர சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் .

வேந்நீரில் ஊறவைத்த இலையின் ஊறல் குடிநீரை 15-30 மி.லி கொடுத்து வந்தால் கரும்படை, கரப்பான், மயிர் கொட்டிப் போதல், கிரந்தி, வாதநோய்கள் போன்றவை தீரும்.

உலர்ந்த இலையை ஊறல் குடிநீர் செய்து கொடுத்தால் நுண்புழுக்கள் செத்து மலத்துடன் வெளியாகும்.

வேரை அரைத்து 3 முதல் 5 கிராம் கொடுக்க பாம்பு நஞ்சு முறியும்.

ஆடு தீண்டாப்பாளைச் சமூலச் சாறு, நல்லெண்ணெய் இரண்டும் சமஅளவு சேர்த்து எரித்து தைல பாகத்தில் எடுத்து வடிகட்டி, கரும்படை, கரப்பான் இவற்றிற்குத் தடவலாம். பீனிசம் (sinusitis) தீரும்.

அரைத்த சமூலம் தேங்காய் அளவு எடுத்துக் கொண்டு, நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டி, 10-20மி.லி ஐந்தைந்து நாட்களாக 40 நாட்கள் கொடுத்து வர பெருநோய்த் தடிப்பு நீங்கும்.

ஆடு தீண்டாப்பாளை வேர்ப்பட்டையை அரைத்து 5 கிராம் அளவு உண்டு வந்தால் சகல வித விஷங்களும் இறங்கிவிடும்.

ஆடு தீண்டாப்பாளை வேர்ப்பொடியை மூவிரல் அளவு உட்கொண்டால் வண்டுக் கடி தீரும்.


கட்டுரை

முனைவர் மரு.பெ.பாரதஜோதி

இணைப்பேராசிரியர்      சித்த மருத்துவத்துறை


மிகினும் குறையினும் நோய்செய்யும்

அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்

Our You tube channel    https://www.youtube.com/channel/UC5JnF35lejkpAt2ogpYyfHg

Our Facebook https://www.facebook.com/A2ZAMUTAHM


Reference: Books and other web source

If you have any suggestion kindly write comment section.🙂

By Nathan PG Dip in Yoga and Holistic Heath.....


மஞ்சளின் நன்மைகள்

இன்று நேற்று அல்ல பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் இந்தியர்களின் அன்றாட வாழ்வின் பெரும் பகுதியில் ஆன்மீகம் தொடங்கி உணவு , ம...